Sunday, 2 October 2011

தேசீய கீதங்கள்


                               

தேசீய கீதங்கள்

1. பாரத நாடு 
14.
தாயின் மணிக்கொடி 
பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல் 
தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு


பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத் 
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!



சரணங்கள்

1.

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன் 
     
உச்சியின் மேல்வந்தே மாதரம்என்றே 
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய 
     
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!
(தாயின்)

2.

பட்டுத் துகிலென லாமோ?-அதில் 
     
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று 
மட்டு மிகந்தடித் தாலும்-அதை 
     
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்
(தாயின்)

3.

இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில் 
     
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்) 
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன் 
     
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?
(தாயின்)

4.

கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும் 
     
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் 
நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள் 
     
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்
(தாயின்)

5.

அணியணி யாயவர் நிற்கும்-இந்த 
     
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? 
பணிகள் பொருந்திய மார்பும்-விறல் 
     
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!
(தாயின்)

6.

செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந் 
     
தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர், 
சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின் 
     
சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.
(தாயின்)

7.

கன்னடர் ஒட்டிய ரோடு-போரில் 
     
காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர், 
பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும் 
     
பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.
(தாயின்)

8.

பூதலம் முற்றிடும் வரையும்-அறப் 
     
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும், 
     
மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில் 
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்
(தாயின்)

9.

பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப் 
     
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், 
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத் 
     
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.
(தாயின்)

10.

சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர் 
     
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! 
தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத் 
     
தேவி துவஜம் சிறப்புற வாழ்க!
(தாயின்)


No comments:

Post a Comment